புதன், 10 டிசம்பர், 2014

கோவை மாவட்டம் திருப்பூர் ஆர்ப்பாட்டச் செய்தி பத்திக்கையில்

ஒப்பந்த தொழிலாளர்களின் மூன்று மாத கால சம்பளம் வழங்காததை கண்டித்து போராட்டம்




திருப்பூர், டிச. 10- திருப்பூரில் பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த மூன்று மாத காலமாக சம்பளம் வழங்காததை கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பாக புதனன்று பிஎஸ்என்எல் மைய அலுவலகத்திற்கு முன்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் மைய அலுவலகத்தில் பணி புரியும் இரவு பணியாளர்கள்,
அலுவலக பணியாளர்கள் போன்று ஒப்பந்தத்தில் பணி செய்ய கூடிய பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாத சம்பள தொகையை நிறுத்தி வைத்திருக்கும் சபரிநாதன் மற்றும் இன்னோவேட்டிவ் ஒப்பந்ததாரர்களை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒப்பந்த தொழிலாளர் சங்க கிளைத் தலைவர் சாமியப்பன் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் ரமேஷ், மாவட்ட தலைவர் முத்துக்குமார், மாநில பொருளாளர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

நன்றி
தீக்கதிர்

தினகரன் செய்தி




















தினமணி

சம்பளம் வழங்கக்கோரி பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மூன்று மாதங்களுக்கு மேலாக சம்பளம் வழங்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
÷ பி.எஸ்.என்.எல். மைய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர் சங்க கிளைத் தலைவர் சாமியப்பன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் ரமேஷ், மாவட்டத் தலைவர் முத்துக்குமார், மாநிலப் பொருளாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
÷பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணியாற்றும் இரவு பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் என ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 3 மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பளத்தை, உடனடியாக வழங்க வேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்த ஊழியர்கள்  பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக