திங்கள், 2 பிப்ரவரி, 2015

பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க மார்ச் 17 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்


ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டமைப்பு முடிவு
 


சென்னை, பிப்.2-

பிஎஸ்என்எல் ஊழியர்கள் அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் “பிஎஸ்என்எல்-ஐ காப்போம் தேசத்தை காப்போம்’’ என்ற தலைப்பில் மாநில கருத்தரங்கம் நடைபெற்றது. சி.கே. மதிவாணன் (என்.எஃப்.டி.இ பொதுச்செயலாளர்) தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் பி.அபிமன்யு (பி.என்.என்.எல்.இ.யூ பொதுச்செயலாளர்) சிறப்புரையாற்றினார்.
அவர்பேசும் போது திட்டமிட்டு பிஎன்என்எல்-ஐ அழிப்பதாக குற்றம்சாட்டினார். தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சாதகமாக கொள்கைகள் உருவாக்கப்படுவதாகவும் அவர் கூறினார். பிஎஸ்என்எல் நிறுவனத்திற்காக கருவிகள் வாங்க போடப்பட்ட டெண்டர்களை அரசு ரத்து செய்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தில்லியில் பேரணி
பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க வரும் மார்ச் மாதம் 17ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தவும் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.25ல் தலைநகர்தில்லியில் பேரணி நடத்தவும் முடிவுசெய்துள்ளதாகவும் அவர் கூறினார். பொதுச் சொத்தைபாதுகாக்கும் இந்த போராட்டங்களுக்கு பொதுமக்களும் ஆதரவு அளிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த கருத்தரங்கில் அனைத்து சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
போராட்ட திட்டங்களை பகுதி வாரியாக ஊழியர்களிடம் கொண்டுசெல்லவும் பொதுமக்களிடம் விளக்கும் வகையில் பிரச்சாரம் செய்யவும் கருத்தரங்கில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நன்றீ

தீக்கதிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக