தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்! ஒப்பந்த ஊழியர் எனும் பெயர் தாங்கி எங்கள் வாழ்விலும் வசந்தம் வரும்!என நம்பிக்கையோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் தோழர்களுக்கு தோள்கொடுக்கும் நோக்கமாக , 07/02/1999 அன்று திண்டுக்க‌ல்லில் 3000 பேர் க‌ல‌ந்துகொண்ட‌ அமைப்பு துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌து தான் இந்த தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்,(Tamilnadu Telecom Contract Workers Union /VDR/278 இந்த சங்க நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எல்லோருக்கும் தெரியப்படுத்துவதே இந்த வலைத்தளத்தின் முக்கிய நோக்கமாகும் (EDITED & COMPILED BY-------*******---- சுந்த‌ர‌க்க‌ண்ண‌ன் (BSNL ஒப்பந்த ஊழியர்)944 2352000 ) --
<==============================================================================================================>
TNTCWU " செய்திகள் " வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றோம்
<===============================================================================================================>

சனி, 2 ஆகஸ்ட், 2014

பத்திரிக்கை செய்தி

தினமலர்

தினகரன்

தீக்கதிர் செய்தி

ஒப்பந்த தொழிலாளர் சம்பள பாக்கி வழங்கிட கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கு ஊதி, பாடை கட்டி போராட்டம் 

திருப்பூர், ஆக.2 -திருப்பூர் தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு இரு மாதங்களாக பிஎஸ்என்எல் நிர்வாகம் நிறுத்திவைத்திருக்கும் சம்பளத்தை உடனடியாகவழங்கக் கோரி சங்கு ஊதி,பாடை கட்டி போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக சனியன்று காலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க திருப்பூர் கிளைத் தலைவர் வாலீசன், தொலைத்தொடர்பு தொழிலாளர் சங்க கிளைச் செயலாளர்ரமேஷ் ஆகியோர்தலைமை தாங்கினர். இதில் தொலைத் தொடர்புத் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ, பிஎப்பிடித்தம் செய்து முறையாக கணக்கு வைக்க வேண்டும், அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை காலதாமதம் செய்யாமல் விரைவாக வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இப்போராட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்சங்க மாநிலத் துணைச்செயலாளர் எஸ்.சுப்பிரமணியம், ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் கே.விஸ்வநாதன், மாநிலத் துணைச் செயலாளர் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன், மாவட்டத் துணைத் தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். முன்னதாக பாடைகட்டி அதில் உருவபொம்மை வைத்து, சங்குஊதி ஈமச்சடங்கு செய்வது போல் நூதனபோராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக