தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்! ஒப்பந்த ஊழியர் எனும் பெயர் தாங்கி எங்கள் வாழ்விலும் வசந்தம் வரும்!என நம்பிக்கையோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் தோழர்களுக்கு தோள்கொடுக்கும் நோக்கமாக , 07/02/1999 அன்று திண்டுக்க‌ல்லில் 3000 பேர் க‌ல‌ந்துகொண்ட‌ அமைப்பு துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌து தான் இந்த தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்,(Tamilnadu Telecom Contract Workers Union /VDR/278 இந்த சங்க நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எல்லோருக்கும் தெரியப்படுத்துவதே இந்த வலைத்தளத்தின் முக்கிய நோக்கமாகும் (EDITED & COMPILED BY-------*******---- சுந்த‌ர‌க்க‌ண்ண‌ன் (BSNL ஒப்பந்த ஊழியர்)944 2352000 ) --
<==============================================================================================================>
TNTCWU " செய்திகள் " வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றோம்
<===============================================================================================================>

வெள்ளி, 14 நவம்பர், 2014

பஞ்சப்படி உயர்வை உடனே அமல்படுத்தக்கோரி கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் தர்ணா



கோவை, நவ.14-
பஞ்சப்படி உயர்வை உடனே அமல்படுத்திடக்கோரி தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம் மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் கோவையிலுள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாதத்தின் முதல்வாரத்தில் சம்பளத்தை சம்பள சிலிப்புடன் வழங்க வேண்டும். உடனடியாக போனஸ் வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கான இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்டவற்றை முறையாக அமல்படுத்த வேண்டும். இ-பாஸ்புக் முறையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம் மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் இணைந்து கோவை மாவட்ட பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
.
இப்போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சந்திரசேகரன், ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட உதவி தலைவர் சண்முக சுந்தரம் ஆகியோர் தலைமை தாங்கினர். ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.ரவிச்சந்திரன் வரவேற்றுப் பேசினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன், மாவட்ட உதவி தலைவர் காந்தி, எஸ்.சுப்பிரமணியம், ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட உதவி செயலாளர் வி.பழனிசாமி ஆகியோர் தர்ணா போராட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். நிறைவாக ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் கே. கருப்புசாமி நிறைவுரை ஆற்றினார். இப்போராட்டத்தில் ஏராளமான ஒப்பந்த தொழிலார்கள் மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.