தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்! ஒப்பந்த ஊழியர் எனும் பெயர் தாங்கி எங்கள் வாழ்விலும் வசந்தம் வரும்!என நம்பிக்கையோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் தோழர்களுக்கு தோள்கொடுக்கும் நோக்கமாக , 07/02/1999 அன்று திண்டுக்க‌ல்லில் 3000 பேர் க‌ல‌ந்துகொண்ட‌ அமைப்பு துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌து தான் இந்த தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்,(Tamilnadu Telecom Contract Workers Union /VDR/278 இந்த சங்க நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எல்லோருக்கும் தெரியப்படுத்துவதே இந்த வலைத்தளத்தின் முக்கிய நோக்கமாகும் (EDITED & COMPILED BY-------*******---- சுந்த‌ர‌க்க‌ண்ண‌ன் (BSNL ஒப்பந்த ஊழியர்)944 2352000 ) --
<==============================================================================================================>
TNTCWU " செய்திகள் " வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றோம்
<===============================================================================================================>

வியாழன், 26 மார்ச், 2015

10 ஆண்டுகளாகியும் ஒப்பந்த தொழிலாளர்களாகவே வைத்திருப்பதா? மீஞ்சூரில் சிஐடியு பேரணி, ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், மார்ச் 25 -

மத்திய, மாநில மற்றும் தனியார் நிறுவனங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சார்பில் மார்ச் 24 அன்று மீஞ்சூ ரில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.எண்ணூர் காமராஜர் துறைமுகம், வடசென்னை அனல் மின் நிலையம் வல்லூர் அனல் மின் நிலையம் செட்டிநாடு கோல் டெர்மினல், சென்னை பெட்ரோ லியம் சாலிநேசன், ஐ.ஓ.சி, எச்.பி.சி, பேக்கண்டெயினர், சிகால் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மீஞ்சூர் பகுதியில்உள்ளன. இவற்றில் கடந்த 10 ஆண்டுக ளுக்கு மேலாக குறைந்த கூலியில் ஒப்பந்த தொழிலாளர்களாக ஆயிரக்கணக் கானோர் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடி நீர் கிடையாது. கழிவறை இல்லை. தங்குவதற்கும் அறைகள் இல்லை.வட மாநில தொழிலாளர்களைக் கொண்டு வந்து கொத்தடிமைகள் போல்நடத்துகின்றனர். உயிருக்கு ஆபத்தான தொழில்களில் கூட ஒப்பந்த தொழிலாளர் களை பயன்படுத்தும் நிலை உள்ளது. இந்த மோசமான நிலையை மத்திய மாநில அரசுகள் மாற்ற வேண்டும். ஒப்பந்த தொழி லாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 15,000 வழங்கவேண்டும்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும், பி.எப், இ.எஸ்.ஐ. போன்ற சட்டச் சலுகை கள் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி அத்திப்பட்டு புதுநகர் மேம்பாலத்திலிருந்து தொழிலாளர் கள் ஊர்வலமாக புறப்பட்டு மீஞ்சூர் அருகிலுள்ள பட்டமந்திரியில் கூடி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சி.ஐ.டி.யு மாவட்டத் துணைத் தலைவர் இ. ஜெய வேலு தலைமை தாங்கினார். இதில் தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் கே. விஜயன், சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் கே. இராஜேந்திரன், பொது தொழிலாளர் சங்க பகுதி செயலாளர் ஜி. வினாயகமூர்த்தி, சி.பி.எம். ஒன்றிய செயலாளர் ரமேஷ்குமார் சங்க நிர்வாகிகள் செல்வராஜ், சுந்தரம், சலீல், நரேஷ், உமாசங்கர், சுதாகர் ஆகியோர் பேசினர். இதில் 500 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி தீக்கதிர்(சென்னை)

வெள்ளி, 20 மார்ச், 2015

20/03/2015 அன்று கோவை லேபர் என்போர்ஸ்மெண்ட் ஆபீசர் அவர்களை பலமாத சம்பல பிரச்சினைக்காக கோவை மாவட்ட தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் தோழர்கள் மனு கொடுத்தனர்,நிகழ்ச்சியில் BSNL EU கோவைமாவட்ட செயலர் CR ,தோழர் வெங்கட்ராமன்,தோழர் சந்திரசேகரன்,கருப்புசாமி,ச்ண்முக சுந்தரம்,தோழர்.முத்துக்குமார்,தோழர் சுந்தரக்கண்ணன் மற்றும் TNTCWU கோவை மாவட்ட செயலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்






·