தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்! ஒப்பந்த ஊழியர் எனும் பெயர் தாங்கி எங்கள் வாழ்விலும் வசந்தம் வரும்!என நம்பிக்கையோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் தோழர்களுக்கு தோள்கொடுக்கும் நோக்கமாக , 07/02/1999 அன்று திண்டுக்க‌ல்லில் 3000 பேர் க‌ல‌ந்துகொண்ட‌ அமைப்பு துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌து தான் இந்த தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்,(Tamilnadu Telecom Contract Workers Union /VDR/278 இந்த சங்க நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எல்லோருக்கும் தெரியப்படுத்துவதே இந்த வலைத்தளத்தின் முக்கிய நோக்கமாகும் (EDITED & COMPILED BY-------*******---- சுந்த‌ர‌க்க‌ண்ண‌ன் (BSNL ஒப்பந்த ஊழியர்)944 2352000 ) --
<==============================================================================================================>
TNTCWU " செய்திகள் " வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றோம்
<===============================================================================================================>

செவ்வாய், 10 மார்ச், 2015

பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்



உடுமலை, மார்ச் 10-
முறையாக ஊதியம் வழங்காததை கண்டித்து பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலையில் பணி புரியும் பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்காததை கண்டித்தும், முறையாக ஒப்பந்ததாரரிடம் இருந்து வரவேண்டிய ஊதிய பாக்கியை தர வலியுறுத்தி நூதன முறையில் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காந்திநகர் பகுதியில் உள்ள புதிய பிஎஸ்என்எல் அலுவலக நுழைவாயில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு கஞ்சி காச்சும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு கிளைதலைவர் சி. நித்தியானந்தம் தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட அமைப்பு செயலாளர் வி. பழனிச்சாமி, கே. விஜயன், எஸ். சிக்கந்தர் பாட்ஷா ஆகியோர் போராட்டத்தை விளக்கி பேசினர். மேலும் பிரச்சனைக்கு முடிவு எட்டாத வரையில் தினமும் இங்கு கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்துவோம் என பிஎஸ்என்எல் ஒப்பந்ததொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி தீக்கதிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக