தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்! ஒப்பந்த ஊழியர் எனும் பெயர் தாங்கி எங்கள் வாழ்விலும் வசந்தம் வரும்!என நம்பிக்கையோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் தோழர்களுக்கு தோள்கொடுக்கும் நோக்கமாக , 07/02/1999 அன்று திண்டுக்க‌ல்லில் 3000 பேர் க‌ல‌ந்துகொண்ட‌ அமைப்பு துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌து தான் இந்த தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்,(Tamilnadu Telecom Contract Workers Union /VDR/278 இந்த சங்க நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எல்லோருக்கும் தெரியப்படுத்துவதே இந்த வலைத்தளத்தின் முக்கிய நோக்கமாகும் (EDITED & COMPILED BY-------*******---- சுந்த‌ர‌க்க‌ண்ண‌ன் (BSNL ஒப்பந்த ஊழியர்)944 2352000 ) --
<==============================================================================================================>
TNTCWU " செய்திகள் " வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றோம்
<===============================================================================================================>

திங்கள், 21 ஜூலை, 2014

7 பொதுத்துறை நிறுவனங்கள் தனியாரிடம் தாரைவார்ப்பு



புதுதில்லி, ஜூலை 18-நாட்டின் இலாபகரமாக இயங்கிவரும் புகழ்பெற்ற பொதுத்துறை நிறுவனங்களான எண்ணெய் மற்றும் இயற்கைவாயு கழகம் (ஓ.என்.ஜி.சி) இந்திய இரும்பு தொழிற்சாலை (செப்ல்) இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் உள்ளிட்டு 7 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்திடும் திட்டத்தை மத்திய அரசின் நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
முந்தைய பாஜக அரசின் கீழ் அமைச்சர் அருண்சோரி தலைமையிலான பொதுத்துறை கலைப்புத்துறை செயல்பட்டது. அதேபோன்றே, நரேந்திர மோடிதலைமையிலான பாஜக அரசிலும் பொதுத்துறைகளை கலைத்து தனியார்மயமாக்குவதற்கான துறை உருவாக்கப்பட்டுள்ளது. இப்பொதுத்துறை கலைப்புத்துறை தனியாருக்கு தாரைவார்க்கப்படும் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் கூறப்படும் நிறுவனங்களாவன:
எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கழகம் (ஓ.என்.ஜி.சி) ஸ்டீல்அத்தாரிட்டி ஆப் இந்தியா (செப்ல்) இந்திய நிலக்கரி நிறுவனம் (சி.ஐ.எல்),இந்துஸ்தான் ஏரோநாட் டிக்ஸ் லிமிடெட், பவர் பைனான்ஸ் கார்ப்பரேசன் (பி.எப்.சி) நேஷனல் ஹைடிரோ எலெக்ட்ரிக் பவர் கார்ப்பரேசன் (என்.எச். பி.சி) போன்ற நிறுவனங்களாகும். இவை இலாபகரமாக இயங்கி வருபவை.மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்ற பின்னர், இன்னும் 3 மாதங்களுக்குள் தனியார்மயமாக்க திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று நிதித்துறை அமைச்சக தகவல் வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.
       நன்றி..
தீக்கதிர் நாள்:21.07.2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக