தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்! ஒப்பந்த ஊழியர் எனும் பெயர் தாங்கி எங்கள் வாழ்விலும் வசந்தம் வரும்!என நம்பிக்கையோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் தோழர்களுக்கு தோள்கொடுக்கும் நோக்கமாக , 07/02/1999 அன்று திண்டுக்க‌ல்லில் 3000 பேர் க‌ல‌ந்துகொண்ட‌ அமைப்பு துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌து தான் இந்த தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்,(Tamilnadu Telecom Contract Workers Union /VDR/278 இந்த சங்க நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எல்லோருக்கும் தெரியப்படுத்துவதே இந்த வலைத்தளத்தின் முக்கிய நோக்கமாகும் (EDITED & COMPILED BY-------*******---- சுந்த‌ர‌க்க‌ண்ண‌ன் (BSNL ஒப்பந்த ஊழியர்)944 2352000 ) --
<==============================================================================================================>
TNTCWU " செய்திகள் " வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றோம்
<===============================================================================================================>

வியாழன், 8 ஜனவரி, 2015

அரசுத்துறைகளில் பிஎஸ்என்எல் சேவையை பயன்படுத்துவதை கட்டாயமாக்கக் கோரி தாராபுரத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டம்






தாராபுரம், ஜன. 8-

மத்திய, மாநில அரசுத்துறைகள் பிஎஸ்என்எல் சேவையை பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரத்தில் அண்ணாசிலை முன்பு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் சார்பில் தர்ணாபோராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் சங்ககூட்டமைப்பு நிர்வாகிகளான எம்.நாச்சிமுத்து, ஆர்.லோகநாதன், சி.பாலகிருஷ்ணன், பி.செல்லமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர்.
மேலும் எஸ்.செல்வராஜ் வரவேற்றார். கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் எல்.பரமேஸ்வரன் துவக்கவுரையாற்றினார். மேலும் இந்த போராட்டத்தில் பிபிஎன்எல் நிறுவனத்தை பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைக்கவேண்டும். மேலும் முன்னேற்றம் விரிவாக்கம் மற்றும் சிறந்த சேவைகளை தருவதற்கு தேவையான கருவிகளை உடனடியாக வாங்க வேண்டும்.பிஎஸ்என்எல் எம்டிஎன்எல் இணைக்கும் முடிவினை கைவிடவேண்டும்.
மத்திய மாநில அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறைகள் பிஎஸ்என்எல் சேவையை பயன்படுத்துவது என்பதை கட்டாயமாக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் கண்ணுச்சாமி, டி.பி.பழனிச்சாமி, ஜி.குமார்,வி.மணியன், எஸ்.அய்யாச்சாமி, என்.கனகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் என்.புண்ணியகோடி நன்றி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக